For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை- காரணம் என்ன?!

Google Oneindia Tamil News

போடிநாயக்கனூர்: போடிநாயக்கனூர் அருகே மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள். சிந்தலசேரி பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார்.

அங்கிருந்து நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பதறி போன விடுதி நிர்வாகிகள் காளியம்மாளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

கிணற்றில் பிணம்:

எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே தேவாரம் , சிந்தலசேரி சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

மீட்ட போலீசார்:

இதுகுறித்து தேவாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டனர்.

முதியோர் இல்லம் காளியம்மாள்:

விசாரணையில் பிணமாக கிடந்தவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த காளியம்மாள் என தெரியவந்தது.

போலீஸ் விசாரணை:

இவர் அங்கிருந்து வெளியேறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
An elderly woman who was staying in an old age home committed suicide. Police filed case and investigating about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X