தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின் ரயில் சேவை சீரானது
மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது .
Recommended Video
சென்னை: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.
சென்னையில் மாம்பலம் மற்றும் கோடம்பாக்கம் இடையே ரயில் நிலையத்தில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. வழக்கமான பாதையில் ரயில்களை இயக்க முடியாமல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் பயணிகளிடையே பெரும் குழப்பத்தையும், அவதியையும் இது ஏற்படுத்தி விட்டது. ரயில்களில் ஏறி கூட்டம் முண்டியடிக்கும் நிலை. இதனால் படியில் தொங்கிக் கொண்டு பலர் பயணித்தனர். காலையில் இப்படி பயணித்த 5 பேர் பரங்கி மலை ரயில் நிலையத்தில் பரிதாபமாக கீழே விழுந்து பலியானார்கள்.
படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் பக்கவாட்டு சுவர் மோதி கீழே விழுந்தனர். இதனால் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை சீராகியுள்ளது.