For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு - அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு-அரக்கோணம் பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் (இன்று) 24, 25, 26, 28 மற்றும் 29-ந் தேதிகளில் (5 நாட்களுக்கு) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Electric train service time will be changed due to maintenance work

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50 மணிக்கு திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வ.எண்:66042), செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (66042), திருமால்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் இயக்கப்படும். மேலும் அரக்கோணம்- சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
southern railway has announced Electric train service's time will be changed due to maintenance work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X