சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை: சிஐடியு தலைவர்
சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிஐடியு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிஐடியு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.
எனவே தமிழக மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கூறினார்கள். இதற்காக தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு ஊழியர்களை அழைத்து இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் சிஐடியு மாநில தலைவர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் ''அரசுடன் நடந்த சம்பள உயர்வு தொடர்பான மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மின் வாரியத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதிகாரிகள் எந்தவித ஏற்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்'' என்றுள்ளார்.
மேலும் ''மீண்டும் 15-ம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். கடைசி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்வோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.