எஸ்எம்எஸ் வரும் முன்னே... கரண்ட் கட் ஆகும் பின்னே... - மின்துறையின் 'அடடா' திட்டம்: வீடியோ
மின்சாரத் துறை, இனிவரும் காலங்களில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என அமைச்சர் தங்கமனி தெரிவித்துள்ளார்.
சென்னை: பராமரிப்பு பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்போது அதுகுறித்து நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உதவியுடன் நுகர்வோருக்கு மின்சாரத்துறை, அந்தத்தப் பகுதியில் ஏற்படும் மின்வெட்டு குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். அப்போது அவர், இனி வரும் நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது நுகர்வோருக்கு உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பட்டும் என கூறினார்.
மேலும் மின்சாரத்துறை சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனவும், இனிமேல் மின்சார இனைப்பை ஒரே நாளில் பெறும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த விவரங்களும் எஸ்.எம்.எஸில் அனுப்பப்படுமா என்பது குறித்து எதுவும் அவர் கூறவில்லை.