For Daily Alerts
Just In
மின்சாரம் பாய்ந்து தாயும், குழந்தையும் பலி.. சென்னையில் பரிதாபம்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து தாயும் அவரது 4 மாத குழந்தையும் பலியாகிவிட்டனர்.
சென்னை: சென்னையில் டேபிள் ஃபேன் மின் இணைப்பில் தாயின் கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவரும், அருகில் இருந்த 4 மாத குழந்தையும் பலியாகிவிட்டனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் அருணா. இவருக்கு 4 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று அறையில் டேபிள் ஃபேன் ஓடி கொண்டிருந்தது.
அப்போது எதையோ எடுப்பதற்கு அருணா முற்பட்ட போது அவரது கை டேபிள் ஃபேனின் மின் இணைப்பில் பட்டது. இதில் அருணா மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகில் இருந்த குழந்தை மீதும் பாய்ந்தது.
இதனால் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Lady and her 4 months baby got electrocuted while the Lady's hand touched the electric connection of table fan. Both were died
Story first published: Tuesday, September 5, 2017, 8:00 [IST]