For Daily Alerts
Just In
அக்.19-ல் வேலைநிறுத்தப் போராட்டம்... 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு! - வீடியோ
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மதுரை: சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபவளியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அவசர ஊர்தி 108 ஆம்புலன்ஸ்கள் ஆயிரத்துக்கும் மேல் இயங்கி வருகின்றன. இதில் 4000 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊதிய உயர்வு, பண்டிகைக்கு போனஸ் என எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அக்டோபர் 19ஆம் தேதி தீபாவளியன்று சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4000 ஊழியர்கள் வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
English summary
Emergency service 108 Ambulance employees announce strike on October 19, demanding salary hike.