அறநிலையத்துறை இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்கும் துறையாக உள்ளது.. எச் ராஜா பாய்ச்சல்
அறநிலையத்துறை இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்கும் துறையாக உள்ளது என எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
திருச்சி: அறநிலையத்துறை இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்கும் துறையாக உள்ளது என எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்கி வருகிறார். எச் ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பான வழக்கில் எச் ராஜாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
அறநிலையத்துறை
இந்நிலையில் எச் ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்து அறநிலையத்துறையை அவர் சரமாரியாக சாடினார்.
அழிக்கும் துறை
அவர் பேசியதாவது, அறநிலையத்துறை இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்கும் துறையாக உள்ளது. இந்துக்கள் அல்லாதோர் அறநிலையத்துறையில் பணியாற்றக்கூடாது.
கும்பாபிஷேகம் நடத்த
கோவில்களை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. கும்பாபிஷேகம் நடத்த கூட பணம் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு விளாசி தள்ளினார் எச் ராஜா.
வரவேற்பு
மேலும் சிலைகளை கடத்தி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியதற்கும் எச் ராஜா வரவேற்பு தெரிவித்தார்.
கடத்தப்பட்ட சிலை
பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைதான் என்றும் எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.