For Daily Alerts
Just In
அடுக்குமாடிக் குடியிருப்பில் பணியாற்றிய என்ஜீனியர் கதி என்ன?.. கதறி அழும் மனைவி
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பணியாற்றி வந்த என்ஜீனியர் திணேஷன் என்பவரின் கதி என்ன என்பது தெரியாமல் அவரது மனைவி தனது குழந்தையுடன் கதறி அழுதபடி இருக்கிறார்.
25 வயதான திணேஷ் விபத்து நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பொறியாளராக இருந்து வந்தார். சனிக்கிழமை விபத்து நடந்த சமயத்தில் அவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. செல்போனும் செயல்படவில்லை.
அவர் என்ன ஆனார், அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் அவரது மனைவி திவ்யா பெரும் வேதனையில் மூழ்கியுள்ளார். தனது குழந்தையுடன் கணவரின் புகைப்படத்துடன், அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும், விபத்து நடந்த இடத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.
English summary
An Engineer's wife is stranded with her kid in the Chennai multisotrey building mishap site to know the whereabouts of her husband.
Story first published: Tuesday, July 1, 2014, 9:32 [IST]