For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூர் பொறியியல் கல்லூரியில் மாணவி கட்டையால் அடித்து கொலை... 'சஸ்பெண்ட்' மாணவர் கைது

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் பொறியியல் கல்லூரி (Karur College of Engineering) மாணவியை அதே கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு சிவில் பாடம் படித்து வந்தார் சோனாலி. இன்று வழக்கம் போல கல்லூரி வகுப்பறையில் அமர்ந்திருந்தார் சோனாலி.

Engineering student killed

அப்போது வகுப்பறைக்குள் உருட்டுக் கட்டையுடன் நுழைந்த அதே கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார் என்ற மாணவர் திடீரென தாக்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் சோனாலி.

Engineering student killed

அவர் உடனடியாக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மதுரை அண்ணாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மாணவியை தாக்கிவிட்டு தப்பியோடிய உதயகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Engineering student killed

இந்தச் சம்பவத்தையடுத்து கரூர் பொறியியல் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் பொறியியல் கல்லூரி (Karur College of Engineering) மாணவியை அதே கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Suspended engineering student killed 3rd year civil engineering student Sonali in Karur engineering college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X