மணல் குவாரியால் உண்டான புதைகுழியில் சிக்கி மாணவர்கள் பலி - வீடியோ
கரூர் காவிரி ஆற்றங்கரையில்மணல் குவாரியினால் உண்டான புதைகுழியில் சிக்கி தனியார் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கரூர்: காவிரி ஆற்றின் மணல் குவாரியின் புதைகுழியில் சிக்கி இரண்டு என்ஜினியரிங் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தனியார் என்ஜினியரிங் கல்லூரில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் நெடூர் சாம்பவசிவம் கோயில் அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
தற்போது, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. அதில், மணல் குவாரிகளால் உண்டான புதைகுழிகள் தெரியாமல் மாணவர்கள் ஐவரும் நீந்தியுள்ளனர். அப்போது, அந்தக் குழியில் முரளிதரன் மற்றும் ராம்குமார் என்னும் இரு மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசே மணல் குவாரி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.