ஆங்கிலத்திலும் அசத்தலாம்...காரைக்குடி பள்ளி மாணவர்களுக்கு மொழித் தொடர்பு திறன் பயிற்சி
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி தொடர்பு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்குடி: இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரியாக பேசுவதன் முக்கியத்துவம் மற்றும் உச்சரிப்புகள் கற்று கொடுக்கப்பட்டது. மாணவர்களின் கூச்ச சுபாவத்திற்கான காரணம் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது குறித்து விளக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி உமையாள் இராமநாதன் கல்லூரி, முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பாக "ஆங்கில மொழி தொடர்பு திறன்" என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 30.11.17 முதல் 06.12.17 வரை 5 நாட்கள் மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியினை பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர்ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி
ஆங்கில துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகள் ராஜலெட்சுமி, பிரித்தி பிரியா, சுகன்யா,கற்பகம் மற்றும் இளையபொன்னி ஆகிய 5 மாணவிகள் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பினை ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அளித்தனர்.
எளிதாக பேச பயிற்சி
இப்பயிற்சியில் ஆங்கிலத்தில் சரியாக பேசுவதன் முக்கியத்துவம் மற்றும் உச்சரிப்புகள் கற்று கொடுக்கப்பட்டது. மாணவர்களின் கூச்ச சுபாவத்திற்கான காரணம் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது குறித்து விளக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் பேச பயிற்சி
Thesarus பயன்படுத்தும் முறை, நா நெகிழ்வு (டங் டிவிஸ்டர்) வார்த்தை விளையாட்டு போன்றவை நடத்தப்பட்டன. டிசம்பர் 6ஆம் தேதியன்று பயிற்சி நிறைவடைந்தது. இப்பயிற்சியின் நிறைவு விழாவிற்கு உமையாள் இராமநாதன் கல்லூரி முதல்வர் ஆங்கிலத் துறைத் தலைவர் திருமதி என். அழகுமீனாள் அவர்கள் தலைமையேற்றிருந்தார்.
மாணவர்கள் மகிழ்ச்சி
இப்பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி. கீதா சுந்தரேஸ்வரி மற்றும் விஜயகாந்தி அவர்கள் செய்திருந்தனர்.