ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஏற்காடு விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
வேலூர்: சென்னையில் இருந்து ஈரோடு சென்ற ஏற்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குறைந்த வேகத்தில் ரயில் சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஈரோடுக்கு ஏற்காடு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலானது வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக என்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து 6 அடி தூரம் வரை சென்றது. ரயில் மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.