For Daily Alerts
Just In
மாணவனின் தந்தை படுகொலை.. மத்திய, மாநில அரசுகள்மீது பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மாணவனின் தந்தையை அரசுகள் படுகொலை செய்துள்ளன என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீட் தேர்வால் ஏற்பட்ட உடல்-மன உளைச்சலால் 3 பேர் பலி- வீடியோ
ஈரோடு: நீட் தேர்வு எழுத சென்ற மாணவரின் தந்தையை மத்திய, மாநில அரசுகள் படுகொலை செய்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றார். வெளிமாநில தேர்வு மையங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்றுள்ளதாகவும் அங்கே அவர்கள் மொழி தெரியாமல் தவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பாலகிருஷ்ணன், இதேபோல் எர்ணாகுளத்தில் உயிரிழந்துள்ள மாணவரின் தந்தை மாரடைப்பால் உயிரிழக்கவில்லை எனவும் மத்திய மாநில அரசுகள்தான் அவரை படுகொலை செய்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
Comments
English summary
CPM state secretary Balakrishnan has accused the central and state governments of massacred the student's father. He said that more than ten thousand students have gone to the outside state and they are unaware of the language, saying that all political parties must fight against the Neet Exam.