For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து நீர் திறக்கப்படும்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

Erode Dam water will be opened for farmers - TN CM

விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட விவசாயிகள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக ஜன.2ம் தேதி முதல் நீர் திறக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் மொத்தம் 809 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

இதனால் அந்தியூர், பிரம்மதேசம், வேம்பந்தி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு நீர் வசதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy says Erode Dam water will be opened for agricultural purpose on Jan.2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X