For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

+2 போலவே 10ம் வகுப்பிலும் ஈரோடு நம்பர் 1...97.88 % தேர்ச்சி - கடைசி இடத்தில் திருவண்ணாமலை!

Google Oneindia Tamil News

Erode gets first place
சென்னை: இன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் 97.88 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

அதன்படி, அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்று ஈரோடுமாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 334 பள்ளிகளிலிருந்து 28 ஆயிரத்து 472 பேர் தேர்வு எழுதியதில் 27 ஆயிரத்து 869 பேர் தேர்ச்சி பெறறுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம்- 97.88.

மற்ற மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி விகிதம் பின்வருமாறு :-

கன்னியாகுமரி: 97.78
நாமக்கல் : 96.58
விருதுநகர்: 96.55
கோவை: 95.6
கிருஷ்ணகிரி: 94.58
திருப்பூர்: 94.38
தூத்துக்குடி: 94.22
சிவகங்கை: 93.44
சென்னை: 93.42
மதுரை: 93.13
ராமநாதபுரம்: 93.11
கரூர்: 92.71
ஊட்டி: 92.69
தஞ்சை: 92.59
திருச்சி: 92.45
பெரம்பலூர்: 92.33
திருநெல்வேலி: 91.98
சேலம்: 91.89
புதுச்சேரி: 91.69
தர்மபுரி: 91.66
புதுக்கோட்டை: 90.48
திண்டுக்கல்: 89.4
திருவள்ளூர்: 89.19
காஞ்சிபுரம்: 89.17
தேனி: 87.66
வேலூர்: 87.35
அரியலூர்: 84.18
திருவாரூர்: 84.13
கடலூர்: 83.71
விழுப்புரம்: 82.66
நாகை: 82.28
திருவண்ணமாலை: 77.84

English summary
Erode districts scores highest pass out percentage in SSLC exams with 97.88.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X