கோவிலின் அருகில் தவறு செய்த ஜோடி… தட்டிக்கேட்ட அதிகாரிக்கு அடிஉதை
ஈரோடு: பூங்காவில் இளஞ்ஜோடியின் சில்மிஷத்தை கண்டித்த அரசு ஊழியருக்கு அடி உதை கொடுத்த நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு நகரில் மையப்பகுதியில் உள்ள வ.உ.சி பூங்காவில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இதனால், பொதுமக்களின் வசதிக்காக பூங்காவின் முக்கியமான பகுதிகளில் "கேமரா" ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பாளர்கள்:
இதேபோல், அங்குள்ள நடவடிக்கையை கண்காணிக்க, கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இளஞ்சோடியின் "கில்மா":
இப்பூங்காவில் உள்ள, ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று மாலை ஒரு இளஞ்ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டனர். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்த கேமரா மூலம் இளஞ்ஜோடியின் சில்மிஷத்தை கோவில் கணக்கர் ஜெயந்த் கவனித்தார்.
பெண்ணை தாக்கிய வாலிபர்கள்:
அத்தோடு அந்த ஜோடியுடன் வேறு சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு, அப்பெண்ணை தாக்கினர். இதனை பார்த்து கணக்கர் ஜெயந்த் அங்கு சென்று அந்த பெண்ணை தாக்கிய இளைஞர்களை கண்டித்தார்.
அடிவாங்கிய அரசு ஊழியர்:
அந்த ஜோடியுடன் பாதுகாப்புக்கு வந்த நான்கு வாலிபர்கள் ஜெயந்தை தாக்கி, கோவிலில் உள்ள அறநிலைய துறை அலுவலக கண்ணாடி ஜன்னலை உடைத்தனர்.
நழுவிய இளம் ஜோடி:
அந்நேரம் அந்த இளம்ஜோடி தப்பி சென்றனர்.அதற்குள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதுபற்றி, வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எ ஸ்.ஐ சரவணன் தலைமையிலான போலீஸார் வந்து நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள்:
போலீசாரின் விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஈரோடு ஆண்டவர் வீதியை சேர்ந்த ஜானகி ராமன், குமலன்குட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார், முனிசிபல் காலனியை சேர்ந்த அஷ்வந்த், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பாலசந்திரன் என்பது தெரியவந்தது.
கைது செய்த போலீசார்:
காயம் அடைந்த ஜெயந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரப்பன்சத்திரம் போலீஸார் அந்த நான்கு வாலிபர்களையும் கைது செய்து அழைத்து சென்றனர். தப்பி ஓடிய ஜோடியினரை பற்றிய விசாரணை நடத்திவருகிறார்கள்.