பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்...பயந்து போய் விஷம் குடித்தார் - ஈரோட்டில்!
ஈரோடு: ஈரோட்டில் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகிலுள்ள வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வேன் டிரைவரான இவர் இரு நாட்களுக்கு முன், வண்டிக்கு லோடு ஏற்ற சென்ற இடத்தில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
மாணவி, கூச்சல் போட்டதும், தப்பியோடி விட்டார். விசாரித்த கடத்துார் போலீசார், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கோவை மாவட்டம், அன்னுார் குளத்தில் இராமகிருஷ்ணன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அருகில், பாதியளவு மதுவுடன் மது பாட்டில் கிடந்தது. இதனையடுத்து அன்னுார் போலீசார், கடத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
"தன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, அடிப்பார்கள் என பயந்து, ராமகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்கலாம்" என அன்னுார் போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.