+2 தேர்ச்சி.. ஈரோடு 'டாப்'... கடைசி இடத்தில் வேலூர்.. 3வது இடத்திற்குப் போன விருதுநகர்!
சென்னை: தமிழக அளவில் பிளஸ்டூ தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 96.92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் வேலூர் மாவட்டத்திற்குக் கடைசி இடம் கிடைத்துள்ளது. அங்கு மாணவர் தேர்ச்சி விகிதம் 83.13 சதவீதமாக உள்ளது.
வழக்கமாக முதலிடத்தைப் பிடிக்கும் விருதுநகர் இந்த முறை 3வது இடத்திற்குப் போய் விட்டது.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகித விவரம்:
ஈரோடு - 96.92%
பெரம்பலூர் - 96.73%
விருதுநகர் - 95.73 %
கன்னியாகுமரி- 95.7%
தூத்துக்குடி- 95.47%
ராமநாதபுரம் - 95.04%
சிவகங்கை - 95.07%
திருப்பூர் - 95.2%
தேனி - 95.11%
திருநெல்வேலி - 94.76%
திருச்சி - 94.65%
நாமக்கல் - 94.37%
கோவை - 94.15%
கரூர் - 93.52%
மதுரை - 93.19%
புதுக்கோட்டை - 93.01%
சென்னை - 91.81%
நீலகிரி- 91.29%
சேலம் - 90.9%
காஞ்சிபுரம்- 90.72%
திருவண்ணாமலை - 90.67%
அரியலூர் - 90.53%
திண்டுக்கல் - 90.48%
தர்மபுரி - 90.42%
தஞ்சாவூர் - 90.14%
விழுப்புரம் - 89.47%
திருவள்ளூர் - 87.44%
நாகப்பட்டினம் - 86.8%
கிருஷ்ணகிரி - 85.99%
கடலூர் - 84.63%
திருவாரூர் - 84.18%
வேலூர் - 83.13%