For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் பைக் திருட முயற்சி... சிறுவர்கள் இருவர் கைது

ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை, ஈரோடு, கன்னியாகுமரியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்- வீடியோ

    ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றதாக இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு பெருந்துறை சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தியிருந்தன. அப்போது அங்கு வந்த சிறுவர்கள் வாகனங்களை திருட முயற்சித்துள்ளனர்.

    erode two wheelar theft

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த சிவா மற்றும் ஜெய்ஹிந்த் என்பதும் அவர்கள் வாகனத்தை திருட முயற்சித்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரும் மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுவர்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    English summary
    Two boys are trying to loot the two wheeler in Erode and they are arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X