போலி சான்றிதழ் கொடுக்க மறுத்த அலுவலர் பணியிட மாற்றம்... போராடும் கிராம நிர்வாக அலுவலர்கள்: வீடியோ
போலி சான்றிதழ் கொடுக்காத கிராம நிர்வாக அலுவலரை கோட்டாட்சியர் பணியிட மாறுதல் செய்தார். அதைக் கண்டித்து அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் பெருந்துறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தி
ஈரோடு: பெருந்துறை கிராம நிர்வாக அலுவலரிடம் அரசியல்வாதி ஒருவர் போலி சான்றிதழ் தரக் கூறியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த கிராம நிர்வாக அலுவலரை பணியிடை மாற்றம் செய்த அதிகாரியை கண்டித்து, ஈரோடு பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமியிடம் அரசியல்வாதி ஒருவர், போலி சான்றிதழ் கொடு என கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு நல்லசாமி கொடுக்க மாட்டேன் என கூறி சான்றிதழ் தரவில்லை.
இதனையடுத்து கோட்டாட்சியர் நர்மதா தேவி, நல்லுசாமியை பணியிட மாற்றம் செய்துள்ளார். செய்யாத குற்றத்துக்கு எதற்கு தண்டனை எனக் கோரி, பெருந்துறை வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.