ஈவிகேஎஸ் இளங்கோவனை ஏர்வாடிக்கு அனுப்புங்க - புதுவை பாஜக கொந்தளிப்பு - வீடியோ
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குத் தொட
புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநரை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனை ஏர்வாடிக்கு அனுப்ப வேண்டும். அவர்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புதுவை பாஜகவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே பனிப்போர் நிலவு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார் இளங்கோவன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், கிரண்பேடியை கீழ்பாக்கத்தில் மனநல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். இளங்கோவன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறுவார்.
இளங்கோவனின் கருத்தைக் கண்டித்த புதுவை பாஜகவினர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிகை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். மேலும், அவரை ஏர்வாடிக்கு அனுப்ப வேண்டும் என ஆவேசத்துடன் கூறினர்.