அதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் !
வேலூர்: அதிமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று வெளியிட்டு திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் கிரானைட் ஊழல், மின் கொள்முதலில் ஊழல், ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், உயர் கல்வித் துறையில் ஊழல் உள்ளிட்ட 25 ஊழல்களை பட்டியலிட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுத்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார்..