For Quick Alerts
For Daily Alerts
Just In
கும்மிடிப்பூண்டியில்.. 221 பேர் ஓட்டுப் போட்டால் 2221 என்று காட்டிய இயந்திரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட நூதனக் கோளாறால் சலசலப்பு ஏற்பட்டது.
இங்கு 221 வாக்குகள் பதிவானபோது மெஷினில் 2221 என்று காட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி, காதர்வேடு என்ற கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய இயந்திரம் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்து நடந்தது.
இருப்பினும் ஏற்கனவே வாக்களித்த 221 பேரும் மீண்டும் வாக்களிக்கத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
An EVM created novel menace in Gummidipoondi booth. Later the officials changed the machine and used a new one for polling.