For Quick Alerts
For Daily Alerts
Just In
முன்னாள் அமைச்சர் ஈரோடு சு.முத்துசாமியின் மனைவி காலமானார்
ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சு.முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி காலமானார்.
சென்னை: ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி வயோதிக பிரச்சினைகளால் இன்று காலமானார்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதவின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர். அதிமுக மூத்த தலைவர்களில் ஒன்றாக விளங்கியவரும் ஆவார்.
இவரது செல்வாக்கு ஈரோட்டு மாவட்டத்தில் கொடி கட்டி பறந்தது. இந்நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி வயோதிக குறைபாடுகளால் இன்று சென்னையில் உயிரிழந்துவிட்டார்.
அவரது உடல் பொதுமக்கள், உற்றார், உறவினர் அஞ்சலிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முத்துசாமியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Ex Minister Erode Muthusamy's wife passed away due to age related issues.
Story first published: Saturday, April 14, 2018, 13:17 [IST]