முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை- 3 பேர் கைது
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
திருப்பூர்: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார். இந்நிலையில் ஆம்பூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதன் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் நின்றிருந்தனர்.
அப்போது ஆம்பூர் நெடுஞ்சாலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த கார் அருகே சென்றபோது அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் எப்படியோ அவர்களை மடக்கிபிடித்தனர்.
விசாரணையில் பணம் கேட்டு சிவமூர்த்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்பது குறித்து தெரியாமல் சடலத்துடன் காரில் சுற்றி வந்ததாகவும் இறுதியாக உடலை ஓசூரில் வீசியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் என தெரியவந்தது.
திருப்பூர் சிவமூர்த்தியின் உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அருகே மீட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.