For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலுவலக வாடகை பாக்கி வேணுமா.. அப்படின்னா லஞ்சம் கொடுங்க- மின்வாரிய அதிகாரி பொறி வைத்து கைது: வீடியோ

மின்வாரிய அலுவலகத்தின் வாடகை பாக்கியைக் கேட்ட உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

By Suganthi
Google Oneindia Tamil News

கரூர்: மின்வாரிய அலுவலகத்தின் வாடகை பாக்கியைக் கொடுக்க லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் குளித்தலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டை மின்வாரிய வருவாய் அலுவலகத்துக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த அலுவலக நிர்வாகம் பல மாதங்களாக வாடகை கொடுக்காமலேயே இருந்து வருகிறது.

Exe. Engineer arrested in bribery case in Kulithalai

இதனால், பாபு குளித்தலை கோட்ட செயற்பொறியாளர் தங்கவேலுவிடம் தனக்கு வாடகை பாக்கியாக ரூ.60,000 உள்ளது. அதைத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்குச் செயற்பொறியாளர் தங்கவேலு, வாடகை பாக்கி வேண்டுமானால் தனக்கு ரூ.2000 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அதனையடுத்து, பாபு, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து, தங்கவேலுவிடம் பாபு பணம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.

English summary
Kulithalai Exe. Engineer arrested in bribery case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X