தீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு
தீபாவின் சொத்து ஆவணங்களை பறிக்க போலி வருமான வரித்துறை அதிகாரியை அனுப்பிய கணவர் மாதவன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தீபாவின் சொத்து ஆவணங்களை பறிக்க போலி வருமான வரித்துறை அதிகாரியை அனுப்பிய அவரது கணவர் மாதவன் 2-வது நாளாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரன் போலீசில் சரணடைந்தார்.
அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவனே தம்மை போலி அதிகாரியாக நடிக்க வைத்தார்; தீபாவிடம் இருந்து சொத்து ஆவணங்களை பறிக்க மாதவன் திட்டமிட்டிருந்தார் என திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாதவனை போலீசார் தேடி வருகின்றனர். மாதவன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடி 2-வது நாளாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.