எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன், வயது 70. அப்பா, மெர்க்குரிப்பூக்கள், உள்பட 200க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.
முதிர்கன்னி, பேய்க்கரும்பு, உடையார் உள்ளிட்டவை மிகப்பிரபலமான வாழ்க்கை வரலாற்று நாவல்களாகும். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
நாயகன், ஜென்டில்மேன், ஜீன்ஸ், பாட்சா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் குடும்பத்தினருடன் வசித்து வரும் பாலகுமாரனுக்கு நேற்று மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பாலகுமாரனுக்கு ஏற்கனவே இரண்டுமுறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.