பளிச்சுனு எரிஞ்சா பல்பு... எப்பவுமே பளபளனு இருந்தா குஷ்பு... டிவிட்டரில் புகழ்ந்த நவீன "டி.ஆர்"!
சென்னை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்புவைப் புகழ்ந்து, ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை குஷ்புவும் ரசித்துள்ளார்.
தமிழகத்து ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்டவர் நடிகை குஷ்பு. இட்லிக்கும் கூட குஷ்புவின் பெயரை வைத்து மகிழ்ந்த தலைமுறை நாம்.
தமிழில் முன்னணி நடிகையான வலம் வந்த குஷ்பு, தற்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ளார். அரசியல் பிரவேசத்திற்குப் பின் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் குஷ்பு என்றே கூறலாம்.
— khushbusundar (@khushsundar) May 28, 2016
ஆனாலும், குஷ்பு மீதான கிரேஸ் மக்களுக்கு குறைந்தபாடில்லை. அதனை வெளிப்படுத்துவது போல், திஸ் இஸ் திரு என்ற ரசிகர் ஒருவர் குஷ்பு குறித்து சின்னதாக கவிதை ஒன்றை எழுதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘பளிச்சுனு எரிஞ்சா பல்பு... எப்பவுமே பளபளனு இருந்தா குஷ்பு' என இரண்டு வரியில் குஷ்புவின் அழகை அவர் பாராட்டியுள்ளார்.
இந்தக் கவிதையை ரசித்துள்ள குஷ்பு, அதற்கு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.