முதல்வரை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு முக்கொம்பில் கைது
திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்ததை பார்வையிட வந்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
திருச்சி: முக்கொம்பில் மதகுகள் உடைந்ததை பார்வையிட வந்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
திருச்சி - முக்கொம்புவில் கொள்ளிடம் மேலணையில் உள்ள 8 மதகுகள் நேற்று முன்தினம் இரவும் ஒரு மதகு நேற்று காலையும் உடைந்து விழுந்தது. இதனால் பாலம் சேதம் அடைந்துள்ளது.
இந்நிலையில் 9 கதவணைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கொம்பு சென்றார். முக்கொம்பு வந்த தமிழக முதல்வரை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்திக்க முற்பட்டார்.
அணை உடைப்பு தொடர்பான காரணங்கள் மற்றும் அணை உடைப்பினால் ஏற்படும் விவசாயிகளின் விவசாய பாதிப்பு குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க வந்தார். முக்கொம்பு நுழைவாயிலேயே அய்யாக்கண்ணுவை தடுத்த காவல்துறை அதிகாரிகள் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்று கூறி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.