For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.. அய்யாக்கண்ணு கண்டனம்

காவிரி தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு 6 வார காலம் அவகாசமும் அளித்தது உச்சநீதிமன்றம்.

Farmer Ayyakkannu condemns central govt for seeking extension on Cauvery issue

ஆனால் அததை மத்திய அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு நிறைவடைந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. 6 வார காலத்தை வீணடித்து விட்டு மத்திய அரசு தற்போது அவகாசம் கோரியிருப்பதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Farmer Ayyakkannu condemns central govt for seeking extension on Cauvery issue. Central govt filed Petition in Supreme court on The Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X