பயிர்கள் கருகியதால்… விவசாயி விஷம் குடித்து தற்கொலை.. காரைக்காலில் துயரம்
பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால்: காரைக்கால் பயிர் கருகிதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் அருகே உள்ளது அகரபுத்தக்குடி கிராமம். இங்கு விவசாயி அய்யாசாமி தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர் நீரின்றி காய்ந்து கருகியது. இதனால் தொடர்ந்து மனம் உடைந்து காணப்பட்டார் விவசாயி.
அதுமட்டுமல்லாமல், விவசாயி அய்யாசாமி, வங்கியில் இருந்து பயிர் கடன்களை பெற்றுள்ளார். பயிர் கருகியதால் பணத்தை கட்ட முடியாமல் அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வங்கியில் இருந்து கடனை திரும்பக் கேட்டு வங்கி அதிகாரிகள் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விவசாயி அய்யாசாமி பயிர்களுக்கு தெளிக்க வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திடீரென விவசாயி தற்கொலை செய்து கொண்டதால் காரைக்கால் அகரப்புத்தக்குடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.