For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் கூமுட்டைகளாம்.... தஞ்சையில் முட்டைகளை உடைத்து விவசாயிகள் போராட்டம்

நாடாளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 39 பேரும் கூமுட்டைகள் எனக் கூறி தஞ்சையில் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தஞ்சை: நாடாளுமன்றத்தில் உள்ள 39 எம்பிக்களும் விவசாய நலனில் அக்கறையில்லாத கூமுட்டைகள் என்று கூறி தஞ்சையில் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Farmers Associations protest in Tanjore

இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம், மேகதாதுவில் அணை கட்டுவது உள்ளிட்டவற்றில் அதிமுக எம்பிக்களும் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து வெளியே வந்த விவசாயிகள் கையில் முட்டைகளுடன் 39 எண்களுடன் கூமுட்டை என்று எழுதி அவற்றை சாலையில் போட்டு உடைத்தனர். இதனால் பதற்றம் நிலவியது.

English summary
Farmers association in Tanjore indulged a protest against MPs accusing they are not aware of farmers interests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X