For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னார்குடி டூ முக்கொம்பு.. பேரணியாக சென்ற விவசாயிகளை தஞ்சையில் தடுத்த போலீஸ்.. தள்ளுமுள்ளு

By Veera Kumar
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: முக்கொம்பு அணையை சீரமைக்க வேண்டும், கடைமடை பகுதி விவசாயத்திற்கும் காவிரி தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி,ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரிலிருந்து முக்கொம்பிற்கு விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் பேரணி தஞ்சாவூர் வந்த போது காவல்துறையினர் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.

Farmers rally put on hold by police near Tanjore

இதற்குமேல் பேரணி செல்லக்கூடாது என்று அவர் கூறியதால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை மீறி விவசாயிகள் பேரணி நடத்த முற்பட்டபோது, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பி ஆர் பாண்டியன் உட்பட பல விவசாயிகளை கைது செய்த போலீசார் வேனில் அழைத்து சென்றனர். விவசாயிகள் பேரணி தடைபட்டது. கடைமடை பகுதிக்கும் தண்ணீர் வந்து சேர வேண்டும் அவர்கள் வலியுறுத்தினர்.

English summary
Farmers rally put on hold by police near Tanjore, while they are going to Mukkombu dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X