For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஜாலியா இருக்க முடியல".. கட்டையால் அடித்து.. எட்டி எட்டி உதைத்து.. 3 வயது குழந்தையை கொன்ற சித்தி!!

மூன்றரை வயது குழந்தையை அடித்து கொன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: "நாங்க ஜாலியா இருக்க என் மகள் தடையா இருந்தாள்.. அதனாலதான் பருப்பு கடையும் மத்தினால் அடித்து.. எட்டி உதைத்தாள் என் மனைவி சந்தியா... இதில் குழந்தை இறந்துவிட்டாள்" என்று மூன்றரை வயது குழந்தையை கொன்ற தகப்பன் வாக்குமூலம் தந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்துள்ள ஆயர்பாடியை சேர்ந்தவர் சங்கர்.. 7 வருஷத்துக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைபார்த்தார்.

அப்போது, தன்னுடன் வேலைபார்த்த தஞ்சையை சேர்ந்த பிரியாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்... ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு பிரியா மனஸ்தாபம் காரணமாக சங்கரை விட்டு பிரிந்தார்... குழந்தை சவுமியாவையும் சங்கரிடத்தில் தந்துவிட்டு போய்விட்டார்.

நான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு!நான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு!

சவுமியா

சவுமியா

ஆனால் சங்கருக்கு சவுமியாவை பார்த்து கொள்ள முடியவில்லை என்பதால் தன் பெற்றோர் வீட்டில் கொண்டு போய்விட்டு விட்டார்.. இப்போது சவுமியாவுக்கு மூன்றரை வயதாகிறது.. இதனிடையே சென்னையை சேர்ந்த சந்தியா என்ற 21 வயது பெண்ணை சங்கருக்கு 2-வதாக கல்யாணம் செய்தனர்.. வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே தனிக்குடித்தனமும் நடத்தினர்.. சந்தியா இப்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

திடீர் காயம்

திடீர் காயம்

இவ்வளவு காலம் பெற்றோர் வீட்டில் வளர்ந்த சவுமியாவை சில தினங்களுக்கு முன்பு தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் சங்கர்... கடந்த 11-ம் தேதி, சவுமியாவுக்கு திடீரென உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டிருந்தது.. அதனால், வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. பேத்தி ஆஸ்பத்திரியில் இருப்பதை கேள்விப்பட்டதும் தாத்தா-பாட்டி பதறி அடித்து கொண்டு ஓடிவந்துள்ளனர்.. ஆனால் அதற்குள் சவுமியா இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.

சந்தேகம்

சந்தேகம்

பேத்தியின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுதார் தாத்தா.. சவுமியாவுக்கு தாத்தாதான் ரொம்ப செல்லமாம்.. இவ்வளவு நாள் நல்லா இருந்த குழந்தை, எப்படி திடீரென இறந்துவிட முடியும், உடம்பெல்லாம் எப்படி காயங்கள் ஏற்படும் என்று தாத்தாவுக்கு சந்தேகம் வந்தது.. அதனால் காவேரிப்பாக்கம் ஸ்டேஷனில் பேத்தி சாவில் மர்மம் இருப்பதாக புகார் தந்தார்.. தன் மகன், மருமகள் மீதே சந்தேகம் இருப்பதாகவும் அவர் புகாரில் சொன்னார்.

கர்ப்பம்

கர்ப்பம்

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. சங்கர் சொன்னதாவது: "சவுமியா கொஞ்ச நாள் முன்னாடிதான் எங்க வீட்டுக்கு வந்தாள்.. ஆனால் ஆனால் நாங்க சந்தோஷமாக இருக்க தடையா இருந்தாள்.. வீட்டுக்குள்ளேயே யூரின் போயிடறாள்.. என் மனைவிக்கு இது புடிக்கல.. சந்தியா இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்.. எங்களால் எப்பவுமே ஜாலியாக இருக்க முடியல.

சந்தியா

சந்தியா

அதனால் சந்தியாதான் பருப்பு கடையும் மத்துக் கட்டையால் சவுமியா தலையில் அடித்தாள்... ஆத்திரத்தில் மாடிப்படியிலிருந்து எட்டியும் உதைத்தாள்.. அப்போது உருண்டு படிக்கட்டில் கூர்மையான பகுதியில் சவுமியா மோதி கொண்டாள். நெஞ்சில் படுகாயம் ஏற்பட்டது.. மயங்கினவிட்ள்.. உயிர் இருக்குன்னுதான் நெனசைசோம்.. ஆனா வழியிலேயே இறந்துட்டாள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்" என்றார்.

இந்த வாக்குமூலத்தை கேட்டு தாத்தா மட்டுமல்ல... போலீசாரே அதிர்ந்து உறைந்து நின்றனர்... சங்கரையும் சந்தியாவையும் கைதுசெய்து ஜெயிலுக்குள் அடைத்துள்ளனர்.

English summary
father and his second wife arrested for murder case in ranipettai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X