மதுரை வில்லாபுரத்தில் மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை கைது!
மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
மதுரை: மதுரை வில்லாபுரம் பகுதியில் மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியில் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரம் 45, தையல் மெஷின் மெக்கானிக்-ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமாணமாகி மனைவி இறந்து விட்டார். சரவணன் 14 என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால், முதல் மனைவியின் தங்கை பிரேமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று மகன் சரவணன் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்தான். மனைவி பிரேமாவும் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி்யை தந்தை சுந்தரம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது,
இதுகுறித்து சிறுமி, அக்கம்பக்கத்தினரிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரேமா ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, சுந்தரம் செய்த கொடூரம் பற்றி புகார் அளித்தனர்.
இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.