நாஞ்சில் சம்பத்! உங்களது சாப்பாட்டு தட்டில் இருப்பது "வேறு".. வெளுத்து கட்டிய பாத்திமா பாபு
தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு.
சென்னை: தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு, உங்கள் தட்டில் இருப்பது சோறா? அல்லது வேறா என எழுப்பப்பட்ட கேள்வி மிகப் பொருத்தம் என சாடியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை 'பத்தினி தெய்வங்கள்' என வசைபாடியிருந்தார். இதற்காக நெட்டிசன்களிடம் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இது தொடர்பாக ஊடங்களிடம் எதுவும் பாத்திமா பாபுவும் நடிகை லதாவும் பேசவில்லை. அதே நேரத்தில் நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் போய் பாத்திமா பாபு ஒரு கமெண்ட் போட்டிருக்கிறாரே நெத்தியடி ரகம்.
நாஞ்சில் சம்பத் ஃபேஸ்புக் பக்கத்தில் பாத்திமா பாபு போட்டுள்ள கமெண்ட்:
சம்பத் அவர்களே.... உங்கள் வாந்தியை பொதுவெளியில் எடுத்துள்ளீர்கள்....
நேரமிருந்தால் பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள்.
உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி உங்களுக்கு மிகப் பொருத்தம்
என ஐயம் திரிபற நிரூபித்துவிட்டீர்கள்.
இவ்வாறு பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.