For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் கட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு- ஒருவர் கைது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் கட்டப்பட்டிருந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் பெண் சடலம்- வீடியோ

    சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்குபையில் கட்டப்பட்டிருந்த பெண்சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

    சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் வேல்விழி. இவர் நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

    Female body found in Koyambedu Market

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வேல்விழியை தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் அஜித்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வேல்விழியை தாம்தான் கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை கோயம்பேடு சந்தையில் சாக்குப்பையில் கட்டி போட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அவர் அளித்துள்ளார். அஜித்குமாரின் இந்த தகவலையடுத்து, கோயம்பேடு விரைந்த போலீசார் வேல்விழி சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அஜித்குமார் எதற்காக வேல்விழியை கொலை செய்தார், அவர்களுக்குள் என்ன தகராறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் கிடந்த பெண்ணின் சடலத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Police have recovered the girl's body at Chennai Koyambedu market. The police investigated Ajith Kumar's complaint about missing the Chennai Choolaimettai. In this, he has promised to kill him and then tie the corpse in the market in Koyambedu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X