For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரைப்பட பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா கடத்தல்

திரைப்பட பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சினிமா பைனான்சியர் மகள் கடத்தப்பட்டதாக புகார்! - வீடியோ

    சென்னை: திரைப்பட பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா பேத்ரா மாயமானார். கரிஷ்மா கடத்தப்பட்டதாக தியாகராயார் நகர் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

    பிரபல சினிமா ஃபைனான்சியர் எஸ்.முகுன்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரிராஜா ஆகியோர்மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    Film financier Bothra daughter missing

    போத்ரா தன்னை மிரட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் புகார் கூறியிருந்தார். மிரட்டிப் பணம் பறித்த புகாரில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் போத்ரா.

    அவரை கடந்த ஆகஸ்ட்டில் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து போத்ரா மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ராஜிவ் ஷக்தேர், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் தனது மகள் கரிஷ்மா கடத்தப்பட்டதாக தியாகராயார் நகரில் புகார் தந்துள்ளதாக போத்ரா கூறியுள்ளார். தியாகராயார் நகரில் தங்கியிருந்த கரிஷ்மாவை கடந்த 2 நாளாக காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Popular film financier S Mukanchand Bothra's daughter Karishma has missing today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X