For Daily Alerts
Just In
மதுரை கே.கே.நகர் ஐசிஐசிஐ வங்கியில் திடீர் தீ விபத்து!
மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை கே.கே.நகரில் ஐசிஐசிஐ வங்கி கிளை செயல்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வங்கியின் 2வது தளத்தில் திடீர் என தீப்பிடித்தது.
இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை கையிலெடுத்துள்ளனர். அதில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
English summary
ICICI bank branch operates in KKNagar, Madurai. This morning, the bank's fire broke out on the 2nd floor. Firefighters rushed to the fire with 4 fire-fighting vehicles were trying to bring the fire to the fire. The first trial of the fire was caused by fire.
Story first published: Friday, May 18, 2018, 12:11 [IST]