For Daily Alerts
Just In
சென்னை சென்ட்ரலில் திடீர் “தீ” – மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவால் விபரீதம்!
சென்னை: சென்னை சென்ட்ரலில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் பயணிகள் பீதியடைந்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 ஆவது நடைமேடையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
நடைமேடையில் அமைந்துள்ள மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இத்தீவிபத்தினால் உயிரிழப்போ, பயணிகளின் உடைமைகளுக்கு சேதங்களோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
Fire accident in Chennai central railway station. Railway safety guards trying to controls the fire.
Story first published: Saturday, May 16, 2015, 13:37 [IST]