தாம்பரம் மார்க்கெட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. 15 கடைகள் நாசம்-பொருட்கள் கருகின
மார்க்கட் பகுதியில் தீ பிடித்ததால் 15 கடைகள் எரிந்த நாசமாயின
Recommended Video
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடைகள் எரிந்து சாம்பலாயின
தாம்பரம் சண்முகா சாலையில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் என்னும் இடத்தில், காய்கறி கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. எப்போதும் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்தே காணப்படும்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு திடீரென .தீப்பிடிக்க எரிய ஆரம்பித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பரவி கடைகள் பற்றி எரிந்தன. இதனால் பதற்றமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
தாம்பரம் மார்க்கெட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. 15 கடைகள் நாசம்-பொருட்கள் கருகின #TambaramFire pic.twitter.com/6UP8IElpLN
— Oneindia Tamil (@thatsTamil) April 28, 2018
இந்த தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அத்துடன், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. தீ விபத்துக்கு மின்கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.