குபுகுபுவென பற்றி எரிந்த தீ.. பல லட்சம் மதிப்பு பஞ்சு குடோன் காலி.. ஆலங்குளம் அருகே!
பஞ்சு குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.
Recommended Video
நெல்லை: ஆலங்குளம் அருகே தனியார் பஞ்சு கிடங்கு ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள பகுதி கரும்புலியூத் இங்கு தனியார் பஞ்சு குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் இன்று காலை திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. பஞ்சு குடோன் என்பதால் தீ அங்கிருந்த பஞ்சினில் பற்றி குபுகுபுவென பரவ தொடங்கியது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை, ஆலங்குளம், தென்கசி ஆகிய பகுதிகளிலிருந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு எரிந்து கருகியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.