For Daily Alerts
Just In
சென்னை, பெசன்ட் நகர் குடிசை பகுதிகளில் திடீர் தீ - 100 குடிசைகள் எரிந்து நாசம்
சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் பின்புறத்தில் ஓடக்குப்பம் என்ற ஏரியாவில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் கருகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 வாகனங்களில் வந்து தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். நள்ளிரவில் குடிசைகள் தீப்பற்றி எரிவதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
Fire in chennai Besant Nagar slum destroys hundreds of houses
Story first published: Wednesday, August 3, 2016, 2:00 [IST]