சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முன்பகுதி தீ அணைக்கப்பட்டது!
தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ பெரும் போராட்டத்துக்குப் பின்பு அணைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ பெரும் போராட்டத்துக்குப் பின்பு அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்றப்பகுதிகளில் தீ இன்னும் கரும்புகையுடன் பற்றி எரிகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராய நகரே கிடுகிடுத்து போனது. அணைக்க அணைக்க தீ பிழம்புகள் வெளிவந்துக் கொண்டே இருந்தன.
வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் அடுக்குமாடி கட்டத்தின் 4 தளங்கள் சீட்டுக்கட்டைப் போல் சரிந்தது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் தரைத்தளத்தின் முன்பகுதியில் இன்று மீண்டும் தீப்பற்றியது.
இதையடுத்து ஹைட்ராலிக் எந்திரங்கள் உதவியுட்ன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடினர். இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முன்பகுதியில் பற்றிய தீ 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
தரைத்தளத்தில் நேற்று நள்ளிரவு அணைக்கப்பட்ட தீ இன்று காலை மீண்டும் கொழுந்து விட்டு எரிந்தது. கொழுந்து விட்டு எறிந்த தீயின் வெப்பத்தால் கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. நேற்று அதிகாலை பிடித்த தீ 2வது நாளாக தற்போது வரை தொடர்ந்து எரிந்து வருகிறது.