For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: பெண் தொழிலாளி பலி!

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் சுக்காம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

Firecrackers explosion near Dindigul

இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த பொன்னுதாய் என்பவர் நேற்று வேலை முடிந்து செல்லும்போது தனது செல்போனை குடோனுக்குள் மறந்து விட்டு சென்றுள்ளார். எனவே அதனை எடுப்பதற்காக இன்று குடோனுக்குள் பொன்னுசாமி சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று குடோனுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியன. இதில் பொன்னுதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், அந்த கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
A fire broke out at the fireworks plant near Dindigul. The female worker died in this. Vedasandur police have registered a case and are investigating the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X