For Daily Alerts
Just In
ராமநாதபுரம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், கடலில் குளிக்க தடை: மாவட்ட ஆட்சியர்
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!-வீடியோ
ராமநாதபுரம்: கடல் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் தென் தமிழக கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் மாவட்ட தமிழக அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் சீற்றமாக இருப்பதால் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முற்பகல் 11.50க்கு மணிக்கு வழக்கத்தைவிட கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Comments
ramanathapuram district collector natarajan ban fishermen sea ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மீனவர்கள் தடை கடல்
English summary
Ramanathapuram collector orders fisherman to do not enter into sea for tomorrow and day after tomorrow. The wave will be high for two days in the south sea.
Story first published: Friday, April 20, 2018, 17:36 [IST]