நாகை அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படை அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.
நாகை: நாகை, வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் மாதம் பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது. அதன்பின்னர் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட பின்னரும் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியும் இலங்கை கடற்படை அட்டூழியம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தமிழகம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கட்டையால் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் செந்தில், குமரசாமி, அமுதகுமார், கலைமணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.