For Quick Alerts
For Daily Alerts
Just In
தொடரும் கனமழை.. பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 17000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 17000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Flood warning for Bhavani river bang people. Heavy rain Kovai district.
Story first published: Monday, June 11, 2018, 20:28 [IST]